உங்களை நினைத்து பெருமைபடுகிறேன் - ரோகித் குறித்து அவரது மனைவி உருக்கமான பதிவு

கையில் போடப்பட்ட தையலோடு, பேட் செய்த அவர் 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். அதிர்ஷ்டவசமாக, எலும்பு முறிவு இல்லை, அதனால் என்னால் பேட்டிங் செய்ய முடிந்தது என்று ரோஹித் கூறினார்.
உங்களை நினைத்து பெருமைபடுகிறேன் - ரோகித் குறித்து அவரது மனைவி உருக்கமான பதிவு
Published on

இந்தியா -வங்காளதேச அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி சிறப்பாக விளையாடி 271 ரன்கள் எடுத்தது. 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய களமிறங்கியது.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தனர். எனவே, வங்காளதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஒரு நாள் தொடரை வென்றது.

இந்த போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார் கேப்டன் ரோகித் சர்மா. இதனால் அவர் பேட்டிங்கின் போதும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்புக்கு சென்ற நிலையில் ஒன்பதாவதாக வீரராக களமிறங்கினார்.

கையில் போடப்பட்ட தையலோடு, கிளவுஸை வெட்டி பேட் செய்த அவர் 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம். ஆனாலும் கடைசி வரை போராடியும் அவரால் இந்திய அணியை வெற்றிப் பெறவைக்க முடியவில்லை. ஆனாலும் அவரின் போராட்ட குணத்தை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

அந்த வகையில் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனதில் தோன்றுவதை அப்படியே வெளியே சென்று செய்யும் உனக்குள் இருக்கும் மனிதனை பார்க்கையில் மிகவும் பெருமையாக உள்ளது. ஐ லவ் யூ என பதிவிட்டுள்ளார்.

போட்டிக்கு பின் பேசிய ரோஹித், கட்டை விரலில் இடப்பெயர்ச்சி இருப்பதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார். ஹிட்மேனால் அவர் எவ்வளவு காலம் வெளியேறுவார் என்பதை தெளிவுபடுத்த முடியாத நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரை 3வது ஒருநாள் போட்டியில் இருந்து விலக்கினார்.

"இது (கட்டைவிரல் காயம்) பெரிதாக இல்லை. சில இடப்பெயர்வு மற்றும் சில தையல்கள். அதிர்ஷ்டவசமாக, எலும்பு முறிவு இல்லை, அதனால் என்னால் பேட்டிங் செய்ய முடிந்தது என்று ரோஹித் கூறினார். பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் டிராவிட், ரோஹித் தனது கட்டைவிரல் காயத்தை பகுப்பாய்வு செய்ய மும்பைக்கு விமானத்தில் செல்வார் என்று கூறினார். சோதனைக்குப் பிறகுதான் அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியும் என தெளிவுபடுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com