மோதலுக்கு பின் கோலியுடன் பேசியதை பகிர்ந்து கொண்ட கான்ஸ்டாஸ்

அவரிடம் நீங்கள் தான் என்னுடைய ரோல் மாடல் என்று கூறினேன். அவருக்கு எதிராக விளையாடுவதே உண்மையில் எனக்கு கவுரவம்.
மோதலுக்கு பின் கோலியுடன் பேசியதை பகிர்ந்து கொண்ட கான்ஸ்டாஸ்
Published on

பார்டர் கவாஸ்கர் தொடர் முழுவதுமே பரபரப்பாக இருந்தாலும 19 வயது இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் களத்திற்கு வந்தபிறகு, தொடரில் பல சம்பவங்கள் நடந்தது. அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே பும்ராவிற்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி சிக்சர்களாக பறக்கவிட்ட சாம் கான்ஸ்டாஸ் அரைசதம் விளாசி அசத்தினார்.

அதுமட்டுமில்லாமல் பும்ரா ஓவரில் சிக்சர் அடித்த பிறகு ரசிகர்களை சத்தம் எழுப்ப சொல்லி சைகை காட்டியது, விராட் கோலியுடன் தோள்பட்டை மோதல், பும்ரா விக்கெட்டின் போது செலப்ரேஷன், ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்யும்போது பேசி தொல்லை செய்துகொண்டே இருந்தது. கவாஜாவுக்காக பும்ராவிடம் வார்த்தைகளை பறிமாறிக்கொண்டது என கான்ஸ்டாஸ் ஒரு பரபரப்பான டெஸ்ட் தொடரை ஆடினார்.

விராட் கோலியுடனான தோள்பட்டை மோதலுக்கு பிறகு சாம் கான்ஸ்டாஸ் விராட் கோலியின் தீவிர ரசிகர் என்ற வீடியோ வைரலாக பரவியது. இந்நிலையில் கோலி மிகவும் எளிமையான மற்றும் அன்பான மனிதர் என்று சாம் கான்ஸ்டாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து கான்ஸ்டாஸ் கூறியதாவது:-

சிறுவயதிலிருந்தே விராட் கோலி தான் என்னுடைய ரோல் மாடல். அவரை என் குடும்பத்திற்கே மிகவும் பிடிக்கும். அந்த மோதலுக்கு பிறகான போட்டியின்போது, நான் அவரை சந்தித்து நிறைய பேசினேன். அவரிடம் நீங்கள் தான் என்னுடைய ரோல் மாடல் என்று கூறினேன். அவருக்கு எதிராக விளையாடுவதே உண்மையில் எனக்கு கவுரவம். கோலி மிகவும் எளிமையான மற்றும் அன்பான மனிதர்.

நான் அவரை முதலில் களத்தில் எதிர்கொண்ட போது, விராட் கோலி என் முன்னே பேட்டிங் செய்கிறார்' என்று என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு அந்தளவு நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. இந்திய மக்கள் களத்தில் அவருக்குப் பின்னால் முழுமையாக இருந்தது. அவரது பெயரைக் கோஷமிட்டது. இது ஒரு நம்பமுடியாத அனுபவம்.

என்னுடைய இலங்கை தொடருக்கு கோலி எனக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அவர் கிரிக்கெட்டின் ஜாம்பவான், மூன்று வடிவங்களிலும் சிறந்த வீரர். நான் அவரைப்போலவே எதிர்காலத்தில் வர ஆசைப்படுகிறேன்

என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com