Emotional Video: வான்கடே மைதானத்தில் ரோகித் பெயரில் ஸ்டாண்ட்- கண்கலங்கிய குடும்பத்தினர்

ரோகித் ஸ்டாண்டை அவரது அப்பா, அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.புதிய ஸ்டாண்டை திறக்கும் போது அருகில் இருந்த அவரது மனைவி ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
Emotional Video: வான்கடே மைதானத்தில் ரோகித் பெயரில் ஸ்டாண்ட்- கண்கலங்கிய குடும்பத்தினர்
Published on

மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.

மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட் திறக்கப்பட்ட போது மேடையில் இருந்த அவரது மனைவி கண்கலங்கினார். குறிப்பாக கண்ணீருடன் ரோகித் சர்மாவை ஒரு பார்வை பார்ப்பார். அதில் கணவன் மீதான மனைவியின் அன்பு வெளிப்பட்டதை பார்க்க முடிந்தது. மேலும் அவரது தாய், தந்தையும் ஆனந்த கண்ணீர் சிந்தினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இது குறித்து ரோகித் கூறியதாவது:-

எனக்கு எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. இது ஒரு சிறந்த உணர்வு. நான் இன்னும் விளையாடும்போது இந்த மரியாதை அதை சிறப்பானதாக்குகிறது. இங்கு இருக்கும் பலருக்கு, குறிப்பாக என் குடும்பத்தினர், என் அம்மா, அப்பா, என் சகோதரர், அவரது மனைவி மற்றும் என் மனைவிக்கு முன்னால் இதைப் பெறுவது ஒரு பெரிய மரியாதை.

என ரோகித் சர்மா கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com