கடலில் விழுந்த மனைவியின் செல்போன்.. மீட்டுக் கொடுத்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா

உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ரோகித் சர்மா அவரது குடும்பத்துடன் செலவிட்டுள்ளார்.
கடலில் விழுந்த மனைவியின் செல்போன்.. மீட்டுக் கொடுத்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் எனவும் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்று நிறைய வதந்திகள் பரவின.

இருப்பினும், கேப்டன் பதவியில் இருந்து விலகுவது அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விடுமுறையை ரோகித் சர்மா அவரது குடும்பத்துடன் செலவிட்டுள்ளார். கடற்கரையில் அவரது மனைவி ரித்திகா மகள் சமிரா ஆகியோருடன் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதில் சுவாரஸ்யமாக நிகழ்வை ரோகித் சர்மாவின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்ரோயில் பகிர்ந்துள்ளார். அதில் தனது கைப்பேசி கடலில் விழுந்ததாகவும் அதனை ரோகித் கடலில் குதித்து எடுத்துக் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com