நகைச்சுவையானவர்.. உலகத்தில் சிறந்த வீரர்.. பும்ராவை புகழ்ந்த முன்னாள் இங்கிலாந்து வீரர்

பும்ராவின் செயல்பாடுகளை தான் நான் விரும்பி பார்த்தேன். தற்போது யாரும் அவரை போல் இல்லை.நல்ல வேளையாக அவரது பந்து வீச்சை நான் எதிர்கொள்ளவில்லை.
நகைச்சுவையானவர்.. உலகத்தில் சிறந்த வீரர்.. பும்ராவை புகழ்ந்த முன்னாள் இங்கிலாந்து வீரர்
Published on

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 1 - 0* (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி டிசம்பர் 6-ந் தேதி அடிலெய்ட் நகரில் தொடங்குகிறது.

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் சிறந்த பவுலர் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீபன் ஃபின் வியப்பான பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது:-

ஜெய்ஸ்வால் 161 ரன்களை சிறப்பாக குவித்தார். ஆனால் தற்சமயத்தில் உலகின் சிறந்த வீரராக செயல்படும் ஜஸ்ப்ரித் பும்ராவின் செயல்பாடுகளை தான் நான் விரும்பி பார்த்தேன். தற்போது யாரும் அவரை போல் இல்லை. உண்மையில் அவரை பார்க்கும் போது நகைச்சுவையானர் போல தெரிகிறது. ஏனெனில் நீங்கள் பார்க்கும் போது அவர் அந்தளவுக்கு அசத்தலாக செயல்படுகிறார். நல்ல வேளையாக அவரது பந்து வீச்சை நான் எதிர்கொள்ளவில்லை. என்று கூறினார்.

இந்தியாவின் வெற்றி குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் கூறியதாவது:-

பெர்த் மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை இப்படி சுத்தியால் அடித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் பெர்த் பொதுவாக விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடமாகும். இம்முறை அப்போட்டி வாகா மைதானத்தில் நடைபெறவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் ஆப்டஸ் மைதானத்தைப் பற்றியும் எனக்கு தெரியும்.

வரலாற்றில் அங்கே ஆஸ்திரேலியா இப்படி நிறைய தோல்விகளை சந்திக்க மாட்டார்கள். அதையும் தாண்டி வென்ற இந்திய மிகவும் தைரியத்துடன் செயல்பட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். எனக் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com