

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 34 வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, குஜராத் அணி முதலில் களமிறங்குகிறது.
புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி மூன்றாவது இடத்திலும், குஜராத் அணி 7-வது இடத்திலும் நீடிக்கிறது.