ஐ.பி.எல். புள்ளிப்பட்டியல்: முதல் இடத்துக்கு முன்னேறியது ஆர்.சி.பி. அணி

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி. அணி திரில் வெற்றி பெற்றது.இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது ஆர்.சி.பி. அணி.
ஐ.பி.எல். புள்ளிப்பட்டியல்: முதல் இடத்துக்கு முன்னேறியது ஆர்.சி.பி. அணி
Published on

பெங்களூரு:

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்.சி.பி. அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.

2வது இடத்தில் மும்பை இந்தியன்சும், 3வது இடத்தை குஜராத்தும், 4வது இடத்தை பஞ்சாப்பும், 5வது இடத்தை டெல்லியும், பிடித்துள்ளது.

சென்னை அணி 11 போட்டியில் 2 வெற்றி, 9 தோல்வி என கடைசி இடத்தில் நீடித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com