

ஐபிஎல் 2018 தொடர் நேற்று முடிவடைந்தது. இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை தோற்கடித்து வெற்றி கோப்பையை கைப்பற்றியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஷேன் வாட்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று வெற்றியை பெற்று தந்தார்.
கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், வெற்றிக்கோப்பையை கையில் வைத்து, தனது மனைவி, குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் டோனி பதிவு செய்திருந்தார். அத்துடன், சென்னை அணிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள் மற்றும் மும்பைக்கை நன்றி. 'ஷேன் ஷாக்கிங் வாட்சன்' சிறப்பாக இன்னிங்ஸ் விளையாடி வெற்றியை பெற்று தந்தார். ஷிவா டிராபியை வாங்குவது குறித்து கவலைப்பட வில்லை. அவள் மைதானத்தில் இறங்கி ஓட வேண்டும் என எண்ணினாள்.