RCB அணியை வாங்க உலகப்புகழ் பெற்ற கால்பந்து கிளப்பின் உரிமையாளர் தீவிரம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. RCB அணியின் மதிப்பு சுமார் ரூ.17,762 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
RCB அணியை வாங்க  உலகப்புகழ் பெற்ற கால்பந்து கிளப்பின் உரிமையாளர் தீவிரம்!
Published on

விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.

இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், RCB கிரிக்கெட் அணியை வாங்குவதற்கு, உலகப்புகழ் பெற்ற Manchester United கால்பந்து கிளப்பின் உரிமையாளரான கிளேசர் குடும்பம் ரூ.16,300 கோடி ($1.8 பில்லியன்) ஆஃபர் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் IPL மற்றும் WPL என இரண்டிலும் சாம்பியன் பட்டம் வென்ற RCBயின் மதிப்பு உச்சம் தொட்டுள்ள நிலையில், தற்போதைய உரிமையாளரான Diageo-விடம் கிளேசர் குடும்பம் பிரமாண்ட தொகையை முன்மொழிந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com