IPL 2025: அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் விருதை வென்றார் நிக்கோலஸ் பூரன்

நடப்பு ஐபிஎல் தொடரில் நிக்கோலஸ் பூரன் 40 சிக்சர்கள் அடித்துள்ளார். அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 39 சிக்சர்கள் அடித்து ஸ்ரேயஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
IPL 2025:  அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் விருதை வென்றார் நிக்கோலஸ் பூரன்
Published on

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.

இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், நடப்பு ஐபிஎல் தொடரில் 40 சிக்சர்கள் அடித்து சீசனின் சூப்பர் சிக்ஸர்கள் விருதை நிக்கோலஸ் பூரன் வென்றார்.

அதே நேரத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 39 சிக்சர்கள் அடித்து ஸ்ரேயஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்து நிக்கோலஸ் பூரனின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை அவர் இழந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com