ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே

தொடக்க வீரராக களம் இறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் அணியை பெற வைக்க முடியாத வீரர் என்ற மோசமான சாதனையை ரகானே படைத்துள்ளார். #IPL2018 #RR
ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே
Published on

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நேர்த்தியான பந்து வீச்சு, பீல்டிங்கால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ரகானே 53 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பு ஒரு முறையும் தொடக்க வீரராக களம் இறங்கி 50 ரன்களுக்கு மேல் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் நின்ற ரகானேயால் அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் போன சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்றைய ஆட்டம் மூலம் 2-வது முறையாக ரகானேயால் வெற்றி பெற வைக்க முடியாமல் போகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com