பார்வையற்றோர் டி20 உலக கோப்பை: ரோகித் சர்மா ஸ்டைலில் கொண்டாடிய இந்திய மகளிர் அணி!

முதலில் விளையாடிய நேபாளம் அணி 114 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்தியா 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பார்வையற்றோர் டி20 உலக கோப்பை: ரோகித் சர்மா ஸ்டைலில் கொண்டாடிய  இந்திய மகளிர் அணி!
Published on

பார்வையற்றோர் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

முதலில் விளையாடிய நேபாளம் அணி 5 வி்க்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே அடித்தது. நேபாளம் அணியால் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. பின்னர் இந்திய அணி 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. புலா சரேன் இந்திய அணி சார்பில் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

உலக கோப்பையை வாங்கிய பார்வையற்றோருக்கான இந்திய மகளிர் அணி கேப்டன் ரோகித் சர்மா ஸ்டைலில் கொண்டாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com