சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி.. இலங்கைக்கு 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இந்திய அணி சார்பில் சுப்மன் கில் 92 ரன்களை குவித்தார். இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி.. இலங்கைக்கு 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
Published on

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. பேட்டிங்கில் இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெறும் 4 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

இவருடன் களமிறங்கிய சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 92 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 82 ரன்களை எடுத்த போது அவுட் ஆனார். கே.எல். ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது. இலங்கை சார்பில் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளையும், துஷமந்தா சமீரா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com