சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரித்தது.
சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!
Published on

சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.

சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரித்தது.

இந்நிலையில், சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய வழக்கில் சுரேஷ் ரெய்னாவின் ரூ.6.64 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும், ஷிகர் தவானின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com