கிரிக்கெட் வீரர்களுக்கு புத்தாண்டு விருந்தளித்த ஆஸ்திரேலிய பிரதமர்

பிரதமர் ஆண்டனி அல்பானீஸை இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்தனர்.கிரிக்கெட் வீரர்களுடன் ஒன்றரை மணி நேரம் உரையாடிய அவர் புத்தாண்டு விருந்து அளித்தார்.
கிரிக்கெட் வீரர்களுக்கு புத்தாண்டு விருந்தளித்த ஆஸ்திரேலிய பிரதமர்
Published on

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 3-1 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை நேரில் சந்தித்தார். ஆஸ்திரேலிய பிரதமர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கிரிக்கெட் வீரர்களுடன் ஒன்றரை மணி நேரம் உரையாடிய அவர் புத்தாண்டு விருந்து அளித்தார்.

அப்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் ஆண்டனி அல்பானீஸ் உற்சாகமாக கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு பற்றி ஆண்டனி அல்பானீஸ் தனது இன்ஸ்டாகிராமில், இது வேறு எந்தத் தொடரையும் போலல்லாத ஒரு ஆஷஸ் தொடராக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை முதல் சிட்னி மைதானம் ஆஸ்திரேலிய ரசிகர்களும் பார்மி ஆர்மியும் மெக்ராத் அறக்கட்டளையின் சிறந்த பணியை ஆதரிக்கும் இளஞ்சிவப்பு கடலாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்குப் போவோம் என பதிவிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com