ஹரிஸ் ராஃப் செயலுக்கு ரிவெஞ்ச் எடுத்த பும்ரா: வைரலாகும் புகைப்படம்

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.முதலில் ஆடிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஹரிஸ் ராஃப் செயலுக்கு ரிவெஞ்ச் எடுத்த பும்ரா: வைரலாகும் புகைப்படம்
Published on

துபாய்:

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை குறிக்கும் வகையில், 6 கைவிரல்களை காட்டினார். மேலும், விமானம் விழுவது போன்று சைகை காட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது செயலுக்கு போட்டிச் சம்பளத்தில் முப்பது சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. முதலில் ஆடிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்நிலையில், பாகிஸ்தானி ஹரிஸ் ராஃப் விக்கெட்டை போல்டாக்கிய பும்ரா, அதன்பிறகு விமானம் மேலிருந்து கீழே விழுந்து நொறுங்குவதைப் போல சைகை செய்தார்.

ஹரிஸ் ராஃப் செய்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பும்ரா அதே சைகையை செய்தது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com