2-வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா அணிக்கு 125 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வுதென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி தடுமாறியது.
2-வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா அணிக்கு 125 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
Published on

2-வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா அணிக்கு 125 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. அந்த சமயத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா நிதானமாக விளையாடி 39 ரன்களை அடித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் அடித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com