திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 8-ந்தேதி ரத சப்தமி விழா

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ரத சப்தமி விழாவில் கோவிலில் கல்யாண உற்சவம், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது
திருச்சானூர் பத்மாவதி தாயார்
திருச்சானூர் பத்மாவதி தாயார்
Published on

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சூரிய ஜெயந்தியையொட்டி வருகிற 8-ந்தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. கோவிலில் வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அனைத்து வாகனச் சேவைகளும் நடக்கிறது.

அதன்படி 8-ந்தேதி காலை 7 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை சூரிய பிரபை வாகனச் சேவை, காலை 8 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை ஹம்ச வாகனச் சேவை, காலை 9 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை குதிரை வாகனச் சேவை, காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கருட வாகனச்சேவை, காலை 10 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை சிறிய சேஷ வாகனச் சேவை.

மாலை 3 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் சக்கர ஸ்நானம், மாலை 6 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை சந்திரபிரபை வாகனச் சேவை, இரவு 7.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை யானை வாகனச் சேவை நடக்கிறது.

ரத சப்தமி விழாவில் கோவிலில் கல்யாண உற்சவம், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com