சாத்தனூர் திருமூலருக்கு அசுபதி நட்சத்திர சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருமூலரை தரிசித்தனர்கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சாத்தனூர் திருமூலருக்கு அசுபதி நட்சத்திர சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
Published on

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூரில் திருமூல நாயனார் கோவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான திருமூலர் அவதரித்த சாத்தனூரில் திருமூலரை மூலவராக கொண்ட கோவில் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த கோவிலில் நேற்று அசுபதி நட்சத்திரத்தையொட்டி திருமூலருக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருமூலரை தரிசித்தனர். இதில், கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சந்திரசேகரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com