திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது

வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது
Published on

திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. தினமும் உற்சவர் சந்தரசேகரர் பல்வேறு வாகனங்களில் மாட வீதி உலா வருகிறார். விழாவில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வை காண திருவொற்றியூர் மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்கள் வசதிக்காக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com