வள்ளி ஒளிந்த கதை

வள்ளி குகைக்குள் ஒளிந்ததற்கு சில கதைகள் கூறப்படுகின்றன.திருச்செந்தூர் முருகனை மீனவர்கள் மச்சான்சாமி என்று உறவு கொண்டாடுகின்றனர்.
வள்ளி ஒளிந்த கதை
Published on

திருச்செந்தூர் கோவிலில் மூன்றாவது பிரகாரத்தில் வடபுறம் கடலை நோக்கி இறங்கினால் வள்ளி ஒளிந்த குகைக்கு செல்லும் வழி உள்ளது. வள்ளி குகைக்குள் ஒளிந்ததற்கு சில கதைகள் கூறப்படுகின்றன.

வள்ளியை முருகன் சிறையெடுத்து வரும்போது வள்ளியின் தந்தை நம்பிராசன் முருகனை துரத்தினார். அவரிடம் இருந்து பாதுகாப்பதற்காக வள்ளியை இந்த குகையில் முருகன் ஒளித்து வைத்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

மற்றொரு கதை என்ன தெரியுமா? தெய்வயானை பரதர் குலத்தில் பிறந்தவள். அவள் கன்னியாகுமரியை ஆண்ட மச்சேந்திரனின் மகள். அவள் அழகைக்கண்ட முருகன் தெய்வயானையை இரவில் கடத்தி வந்து விடுவார். ஓரிடத்தில் வந்து கொண்டிருந்த போது பொழுது விடிந்துவிட்டது. அந்த இடம் விடிந்தகரை என்றானது தற்போது அந்த ஊரை இடிந்தகரை என்கிறார்கள்.

தெய்வயானையை முருகன் திருமணம் முடிந்து அழைத்து வருவதை அறிந்த வள்ளி, கோபம் கொண்டு இந்த குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு பரதகுலப்பாண்டிய வம்ச சரித்திரம் சான்றாக கூறப்படுகிறது.

இதனால் திருச்செந்தூர் முருகனை மீனவர்கள் மச்சான்சாமி என்று உறவு கொண்டாடுகின்றனர். மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் போது கோவிலுக்கு நேராக படகு கடக்கும் போது தேங்காய் உடைப்பதையும் ஒரு மரபாக வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com