புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம்

28-ந்தேதி இரவு மிக்கேல் அதிதூதர் தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது. 29-ம்தேதி காலையில் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம்
Published on

வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பிரசித்தி பெற்ற புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் காலையில் திருப்பலியுடன் தொடங்கியது. மாலையில் ஜெபமாலையை தொடர்ந்து கொடியை அருட்தந்தை ஜெபநாதன் அர்சித்து ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீர் போன்ற வழிபாடுகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் போன்ற வழிபாடுகள் நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி 9-ம் திருவிழாவன்று இரவு மிக்கேல் அதிதூதர் தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது.

10-ம் திருவிழா அன்று காலையில் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com