ஸ்ரீரங்கம் பற்றிய அரிய தகவல்கள்!

தென்னிந்தியா விலேயே உயர்ந்த ராஜகோபுரம் கொண்டது.நெல் சேமிப்பு கிடங்கு சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில் இருக்கின்றது.
ஸ்ரீரங்கம் பற்றிய அரிய தகவல்கள்!
Published on

* 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படுவதுமான திருவரங்கம் அரங்கநாதர் கோவில், தென்னிந்தியா விலேயே உயர்ந்த ராஜகோபுரம் கொண்டது.

* 'அரங்கம்' என்றால் 'தீவு' என்று பொருள். காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவாகிய அரங்கத்தில் இறைவன் குடியிருப்பதால் இதை, திருவரங்கம்' என்றும், இத்தலத்தில் அருளும் பெருமாளை அரங்கநாதன் எனவும், தாயாரை அரங்கநாயகி என்றும் அழைக்கிறார்கள்.

* இக்கோவிலில் 20 அடி விட்டமும், 30 அடி உயர மும் கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில் இருக்கின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமைந்த இந்த நெல் சேமிப்பு கிடங்கு வட்ட வடிவம் கொண்டவை. மொத்தமாக 1500 டன் அளவிலான நெல்லை இதில் சேமிக்க முடியும். இதில் எந்த காலத்திலும் நெல் குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டதில்லை. அதேபோல, எவ்வளவு நெல் கொட்டினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் தன்மையை உடையது இந்த சேமிப்பு கிடங்கு.

* எல்லா கோவில்களிலும் உள்ள கொடிமரங்கள். கல் மற்றும் மரத்தால் செய்யப்பட்டிருப்பதால் அவை அசையாது. ஆனால் திருவரங்கத்தில் உள்ள ரங்க விலாஸ் மண்டபத்தின் அருகில் இருக்கும் கொடி மரத்தை வணங்கிவிட்டு மேலே பார்த்தால், அது அசைவது போல தோன்றும். அப்படி அசைவது போலத் தோன்றினால், நாம் வேண்டியது நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

* ராமானுஜர் தனது 120-வது வயதில் இயற்கை எய்தினார். பொதுவாக, வைணவ சம்பிரதாயப்படி வைணவ பதவி அடைந்த துறவிகளை எரியூட்ட மாட்டார்கள். அதற்கு பதில் உடல் பள்ளியூட்டப்படும். அதாவது, சமாதியில் அமரவைத்து மூடப்படும்.

அதேபோல ராமனுஜரின் உடல் திருவரங்கத்தின் வசந்த மண்டபத்தில் பள்ளிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கே இருக்கும் ராமானுஜரின் உடல் இன்றும் உயிரோட்டத்துடன் காட்சியளிக்கிறது. ராமானுஜரின் உடல் பச்சைக்கற்பூரம் மற்றும் குங்குமத்தால் செய்யப்பட்ட கலவையால் மூடப்பட்டுள்ளது. 900 ஆண்டுகள் கடந்தும் ராமானுஜரின் உடல் அப்படியே காட்சித்தருவது அதிசயமாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com