திருச்செந்தூர் முருகனுக்கு மயில் இறகு மாலை!

கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.சூரசம்ஹாரம் 7-ந்தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
திருச்செந்தூர் முருகனுக்கு மயில் இறகு மாலை!
Published on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. சூரபத்மனை வதம் செய்த பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

இந்த நிலையில் சுமார் 2,200 கி.மீ தொலைவில் உள்ள குஜராத்தில் இருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்ட மயில் இறகுகள் அங்கு மாலையாக வடிவமைக்கப்பட்டு விமானம் மூலம் திருச்செந்தூர் எடுத்துவந்து கந்த சஷ்டி விழாவில் ஜெயந்திநாதருக்கு அணிவிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com