பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை விழா 17-ந்தேதி தொடங்குகிறது

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும்.திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுவர்.
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை விழா 17-ந்தேதி தொடங்குகிறது
Published on

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தையொட்டி லட்சார்ச்சனை விழா நடைபெற்று வருகிறது. அப்போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுவர்.

இந்த ஆண்டுக்கான லட்சார்ச்சனை விழா, ஆடி மாதப்பிறப்பையொட்டி வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மேலும் வெள்ளிக்கிழமை தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com