குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா கால்நாட்டு நிகழ்ச்சி

சுவாமி, அம்மனுக்கு தீப ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கால் நாட்டப்பட்டது.
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஜூலை 11-ந்தேதி கோவில் கொடைவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் நேற்று மதியம் 2 மணிக்கு கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

விநாயகர் நாராயணர் மற்றும் பரிவார மூர்த்திகள் பெரியசாமி அம்மன் ஆகியோர் புஷ்ப அலங்காரத்துடன் காட்சியளித்தனர். சுவாமி, அம்மனுக்கு தீப ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னர் முப்பிடாதி அம்மன் சன்னதி முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காலுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவை சாற்றப்பட்டு புஷ்ப அலங்காரத்துடன் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கால் நாட்டப்பட்டது.

விழா ஏற்பாடுகளை குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னைவாழ் நாடார் சங்கத்தினர், கோவை வாழ் நாடார் சங்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர் விழாவில் கோவில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com