கும்பகோணம் சக்கரபாணி சாமி கோவில் தெப்ப உற்சவம்

திருமஞ்சனம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் சக்கரபாணி சாமி கோவில் தெப்ப உற்சவம்
Published on

கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றாக விளங்கும் சக்கரபாணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப உற்சவம் கோவில் திருக்குளமான சக்கர புஷ்கரணி குளத்தில் நடைபெற்றது. இதையொட்டி திருமஞ்சனம் நடைபெற்றது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு சக்கரபாணி பெருமாள் விஜயவல்லி தாயார், சுதர்சனவல்லி தாயாருடன் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருள தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி, தக்கார் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் சுதர்சன பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com