நெற்றிக்கண் ஆலயமாக திகழும் கோவில்

கோவை நகரத்தில் உள்ள சிவாலயம் கோனியம்மன் ஆலயத்திற்கு தெற்கிலே உள்ளது.கோவை மாநகரின் தனிப்பெரும் அரசியாக விளங்குகின்றாள்.
நெற்றிக்கண் ஆலயமாக திகழும் கோவில்
Published on

ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு குல தெய்வம் உண்டு. அந்த குலதெய்வம் வழிகாட்டுதலில் தான் ஒருவரது வெற்றி- தோல்வி அமையும். எனவே குலதெய்வம் என்பது மிக, மிக முக்கியமானது.

அந்த வகையில் கோவை நகரின் காவல் தெய்வமான கோனியம்மன் 60-க்கும் மேற்பட்ட இனத்தவர்களுக்கு குலதெய்வமாக திகழ்கிறார். குறிப்பாக கவுடர்கள், இருளர்கள், போயர்கள், சோழிய வேளாளர்கள் கோனியம்மனை கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

எந்தவொரு விஷயமாக இருந்தா லும் இவர்கள் கோனியம்மனிடம் வந்து பூ கட்டிப்போட்டு பார்த்து உத்தரவை பெற்ற பிறகே செயல்படுவார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள நெசவுத்தொழில் செய்யும் மக்களுக்கும் கோனியம்மன் தான் குலதெய்வமாக உள்ளாள். மைசூர், பெங்களூரில் இருந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் கோனியம்மனை மனதார குல தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சேலம், திருப்பூர், ஈரோடு பகுதியில் உள்ளவர்கள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தவறாமல் வந்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இப்படி கோனியம்மனை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபட வருபவர்களில் வால்பாறையில் இருந்து வருபவர்கள் அனைவரையும் கவரும் வகையில் தனித்துவம் கொண்டவர்களாக திகழ்கிறார்கள். அவர்கள் வசதி வாய்ப்பு பெற்றவர்கள் அல்ல. தினக்கூலி ரகத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதம் நடக்கும் பெருவிழாவின்போது இவர்கள் வால்பாறையில் இருந்து புறப்பட்டு வந்து விடுவார்கள்.

குறைந்தபட்சம் 100 பக்தர்கள் மொத்தமாக குழுவாக வருவார்கள். எவ்வளவு நேரமானாலும் அவர்கள் காத்திருந்து வழிபடுவார்கள். அதுமட்டுமின்றி அவ ர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வமான கோனியம்மனுக்கு தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட தவறுவதில்லை. இந்த வழிபாட்டை அவர்கள் மிகவும் பயபக்தியுடன் செய்து வருகிறார்கள்.

இதுபற்றி வால்பாறையில் இருந்து வரும் மூத்த பக்தர் ஒருவர் கூறுகையில் ஒரு ஆண்டு நாங்கள் கோனியம்மனை வழிபட வராவிட்டால் எங்கள் உறவுகளிடையே ஏதாவது சண்டை வந்து பிரச்சினை ஆகி விடுகிறது. இல்லையெனில் யாருக்காவது ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுகிறது. எனவே நாங்கள் ஆண்டுதோறும் மொத்தமாக வந்து வழிபட்டு விடுவோம். எங்களில் பெரும்பாலானவர்கள் கோனியம்மனிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போடுவது வழக்கம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com