18 வருடம் சபரிமலை யாத்திரை செல்வதன் புண்ணிய பலன் தெரியுமா?

சபரிமலை யாத்திரை என்பது நாம் செய்த கோடி புண்ணியத்திற்கு சமமாகும்.குருசாமி என்ற நிலையை அடைய முடியும்.
18 வருடம் சபரிமலை யாத்திரை செல்வதன் புண்ணிய பலன் தெரியுமா?
Published on

சபரிமலைக்கு யாத்திரை சென்று தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடுவதாலும் அனைத்து பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

கார்த்திகை மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராவார்கள். அவ்வாறு சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களுக்கு ஒரு குரு சாமி துணை வேண்டும். சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள், 'குருசாமி' என்ற தகுதியை பெறுகிறார்கள்.

18-ம் வருடம் சபரிமலை யாத்திரை என்பது நாம் செய்த கோடி புண்ணியத்திற்கு சமமாகும். ஒரே ஆண்டில் பதினெட்டு முறை சென்றுவிட்டு வந்தால் அவர்களை குருசாமி என கூற முடியாது.

18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு இருமுடி கட்டு கட்டி, 48 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமி என்ற நிலையை அடைய முடியும்.

18-ம் வருடம் சபரிமலை யாத்திரையின்போது, சிறிய தென்னங்கன்று ஒன்றை எடுத்து செல்வார்கள். இதை கண்டதும் குருசாமி என்று மற்ற ஐயப்ப பக்தர்கள் புரிந்துகொண்டு, அவரிடம் ஆசி வாங்குவார்கள்.

இதனால் தான் 18-ம் வருடம் சபரிமலை யாத்திரையை புனித யாத்திரை என்று அழைக்கின்றனர். இந்த குருசாமி, அடுத்த முறை கார்த்திகை மாதத்தில் மாலை அணியும் ஐயப்ப பக்தர்களுக்கு, தன் கையால் மாலை அணிவிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com