மூதாதையர் செய்த புண்ணியம் கிடைக்கனுமா? இதை பண்ணுங்க!

தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். நீத்தார் கடன் செய்வது என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை.
மூதாதையர் செய்த புண்ணியம் கிடைக்கனுமா? இதை பண்ணுங்க!
Published on

ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கவேண்டும் எனவும், புரட்டாசி மகாளய அமாவாசையில் அவர்களை பூஜிக்கவேண்டும் என்றும், தை அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். சூரியன் தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார்.

சூரியனை பிதுர்காரகன் என்றும் சந்திரனை மாதுர்காரகன் என்றும் முன்னோர்கள் கூறுகின்றனர். சூரியனும், சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் தை அமாவாசை சிறப்புக்கு உரியதாகிறது. இதை புண்ணிய காலம் என்பார்கள்.

உத்தராயண புண்ணிய காலமான தை அமாவாசை அன்று பித்ருக்கள் தங்களின் உலகத்துக்கு புறப்படுகிறார்கள். நம் வீடுகளுக்கு வந்து தங்கி இருந்து கிளம்பும் உறவினர்களை எப்படி நாம் நல்ல முறையில் வழி அனுப்பி வைப்போமோ, அப்படி பித்ருக்களுக்கு தை அமாவாசை நாளில் தர்ப்பணம் முதலிய வழிபாடுகளை செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு பூரணமாகக் கிடைக்கும். தை அமாவாசை அன்று அவர்கள் மீண்டும் தங்களின் உலகத்துக்குப் புறப்படுவதாகக் கூறப்படுகிறது.\

நாம் இன்று அனுபவிக்கும் நற்பலன்களுக்கு காரணம் நம் முன்னோர்கள் சேர்த்து வைத்துள்ள புண்ணியம்தான். அதை நம் பிள்ளைகளும் பெற்று பயனடைய அதை தொடர வேண்டும்.

பெற்றோர்கள் செய்யும் நற்செயல்கள் பிள்ளைகளுக்கு கட்டாயம் போய் சேரும். எனவே நீத்தார் கடன் செய்வது என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com