அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 10 ஆயிரத்து 8 முறை பதிகம் பாராயணம்

கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெறவேண்டியும் அவினாசி பதிகம் பாடப்பட்டதுஇதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 10 ஆயிரத்து 8 முறை பதிகம் பாராயணம்
Published on

அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது நம்பி ஆரூர் அருளிய அவினாசிபதிகத்தை 10,008 முறை பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இதுகுறித்து அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் சுப்பிரமணிய சிவாச்சாரியார் கூறும்போது:-

"சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், அதனைத் தொடர்ந்து அவினாசிபதிகத்தை 10 ஆயிரத்து 8 முறை பாராயணம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. புண்ணிய கைங்கரியத்தில் அனைத்து பக்தர்களும் சிவனடியார்களும் பங்கேற்று அனைத்து வித இன்னல்கள் நீங்கவும் விரைவில் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெறவேண்டியும் அவினாசி பதிகம் பாடப்பட்டது'' என்றார்.

இதில் அவினாசி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com