பூம்பல்லக்கில் அம்பாள் வீதிஉலா: சங்கரன்கோவிலில் இன்று தேரோட்டம்

தினமும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது.ஆடித்தபசு திருவிழா திங்கட்கிழமை நடக்கிறது.
பூம்பல்லக்கில் அம்பாள் வீதிஉலா: சங்கரன்கோவிலில் இன்று தேரோட்டம்
Published on

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. 7-ம் திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பூம்பல்லக்கில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் திருநாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com