புரட்டாசி அமாவாசை அன்று சமயபுரம் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி கிடையாது

புரட்டாசி மாத அமாவாசையான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது என்று கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
சமயபுரம் மாரியம்மன் கோவில்
சமயபுரம் மாரியம்மன் கோவில்
Published on

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் உள்ள மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். குறிப்பாக, அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

இதில் அமாவாசை அன்று இரவு மாரியம்மன் கோவில் வளாகத்தில் தங்கி இருந்து அதிகாலை அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன், காரணமாக ஒவ்வொரு அமாவாசையன்றும் இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மன் கோவில் வளாகத்தில் தங்கி இருந்து அம்மனை வணங்கிச் செல்வார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பல பரிசோதனைகளுக்கு பின்னரே கோவிலுக்கு உள்ளே செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் கோவில் இணை ஆணையர் அசோக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புரட்டாசி மாத அமாவாசையான நாளை மறுநாள் கோவிலில் முடிகாணிக்கை மற்றும் தரிசன நேரம் காலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோவில் சார்ந்த இடங்களில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அரசு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

65 வயதிற்கு மேற்பட்டவர் கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவதை தவிர்க்கவும். கோவிலுக்குள் தேங்காய், பழம், பூ கொண்டு வர அனுமதி இல்லை. பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். மேலும், நோய் அறிகுறி இல்லாத பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com