கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி 25-ந்தேதி நடக்கிறது

கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி 25-ந்தேதி நடக்கிறது

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான குருத்தோலை பவனி வருகிற 25-ந் தேதி நடைபெறுகிறது.
Published on

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை ஒரு கழுதைக்குட்டியின் மேல் அமர்த்தி எருசலேம் நகரின் வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது, வழி நெடுக நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் பிடித்தபடி ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, உன்னதங்களில் ஓசன்னா’ என்று பாடி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை திருநாள் கொண்டாடுகின்றனர். இந்த திருநாள் ஆண்டுதோறும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், அந்த நாள் குருத்தோலை ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது.

அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகள் வழங்கப்படும். அவர்கள் அவற்றை கைகளில் ஏந்தியபடி அந்தந்த ஊர்களில் தெருக்களின் வழியாக ஓசன்னா பாடல் பாடி பவனியாக வருவார்கள். அதைத்தொடர்ந்து திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com