அழகப்பபுரத்தில் புனித காணிக்கை அன்னைதேர் பவனி

அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித காணிக்கை அன்னை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது.
அழகப்பபுரத்தில் புனித காணிக்கை அன்னைதேர் பவனி
அழகப்பபுரத்தில் புனித காணிக்கை அன்னைதேர் பவனி
Published on

அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித காணிக்கை அன்னை திருவிழா 10 நாட்கள் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை பவனி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தன.

9-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு இத்தாலி அருட்பணியாளர் சத்திய நேசன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர், 10 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்பவனி ஆகியவையும், 10-ம் திருவிழாவான நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு மெழுகுவர்த்தி பவனி, திருவிழா கூட்டுத்திருப்பலி, மதியம் 2.30 மணிக்கு புனித காணிக்கை அன்னையின் தேர்பவனி, இரவு 8.30 மணிக்கு தேரில் நற்கருணை ஆசீர் போன்றவையும் நடந்தது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை ஜெய ஆன்றோ சர்ச்சில், பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com