

அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய கொடிமரம் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடந்தது. இதில் பங்குதந்தை அமல்ராஜ் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட கொடிமரத்தை அர்ச்சித்தார். முன்னதாக ஆலயத்தில் திருப்பலி நடந்தது. இதில் பங்கு பேரவை துணை தலைவர் டி.வி.சி.விட்மன், செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் ஜாஸ்மின் எட்வின், பொருளாளர் பாத்திமா மைக்கிள்ராஜன் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.