புதுவை நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழா தொடக்கம்

புதுவை நெல்லித்தோப்பில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 166-வது ஆண்டு பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுவை நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழா தொடக்கம்
Published on

புதுவை நெல்லித்தோப்பில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 166-வது ஆண்டு பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை அருட்தந்தை குழந்தைசாமி தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து உயர்மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம் கொடியேற்றி வைத்தார்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலையில் சிறப்பு மறையுரைகளும் இடம்பெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான சிறப்பு தேர்பவனி வருகிற 15-ந்தேதி மாலை 6-30 மணிக்கு நடக்கிறது. அன்றையதினம் காலையில் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நிறைபேற்றப்படுகிறது. வருகிற 16-ந்தேதி காலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com