தெய்வதரிசன விதிமுறை

நம்மால் உருவகப்படுத்தி வணங்கப்படும் தெய்வங்களை, எல்லா நேரங்களும் நாம் வழிபட முடியாது. தவிர்க்கப்பட வேண்டிய நேரங்களில் வழிபட்டால், அந்த வழிபாடு பயனற்றதாகி விடுகிறது.
தெய்வதரிசன விதிமுறை
Published on

மன அமைதி வேண்டியும், இந்த உலகில் நல்வாழ்வு வாழ நமக்கு மேல் இருக்கும் சக்தியை வணங்கி நல்லாசிகள் பெறவும், நாம் ஆலயங்களுக்குச் செல்கிறோம்.

நம்மால் உருவகப்படுத்தி வணங்கப்படும் தெய்வங்களை, எல்லா நேரங்களும் நாம் வழிபட முடியாது. தவிர்க்கப்பட வேண்டிய நேரங்களில் வழிபட்டால், அந்த வழிபாடு பயனற்றதாகி விடுகிறது.

தவிர்க்கப்பட வேண்டிய நேரங்கள்: விழாக்காலங்களில் சுவாமி புறப்பட்டு வீதியுலா வரும்போது மூலவரை வணங்குவதை தவிர்க்கவேண்டும். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்போதும், பிரசாதம் படைக்க திரையிட்டிருக்கும் போதும் சுவாமியை வணங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com