நடராஜருக்கு 6 முறை அபிஷேகம்

நடராஜருக்கு 6 முறை அபிஷேகம்

சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு ஒரு நாளைக்கு 4, 5 மற்றும் 6 காலம் என்ற முறையில் பூஜைகள் நடைபெறும். ஆனால் சிதம்பரம் நடராஜருக்கோ ஆண்டுக்கு 6 முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.
Published on

பொதுவாக 2 வழிகள் நம்முடைய சாஸ்திரத்தில் உள்ளன. அவை தட்சிணாயனமும் என்றும், உத்திராயணம் என் றும் உள்ளது.

அந்த வகையில் உத்திராயணம் என்று சொல்லப்படுகின்ற தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை உத்திராயணம் வழிபாடு நடக்கிறது.

சூரியன் பூமத்திய ரேகைக்கு தெற்கு பகுதியில் சென்றால் தட்சிணாயனமும், வடக்கு பகுதியில் சென்றால் உத்திராயணமும் கணக்கிடப்படுகிறது.

தற்போது உத்திராயண வழிமுறையில் ஆனி திருமஞ்சனம் கொண்டாடப்படுகிறது. சிதம்பரம் நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 அபிஷேகங்களை நிர்ணயித்துள்ளார்கள்.

பொதுவாக சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு ஒரு நாளைக்கு 4, 5 மற்றும் 6 காலம் என்ற முறையில் பூஜைகள் நடைபெறும்.

ஆனால் சிதம்பரம் நடராஜருக்கோ ஆண்டுக்கு 6 முறை அபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி உத்திராயணத்தில் 3 அபிஷேகங்களும், தட்சிணாயனத்தில் 3 அபிஷேகங்களும் நடைபெறும். தற்போது ஆனி திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு உத்திராயணத்தில் 3-வது அபிஷேகமாக இந்த ஆனி திருமஞ்சன மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com