அழகர்கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அழகர்கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
Published on

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

மாலையில் கல்யாணசுந்தரவள்ளி தாயாருக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. இதைதொடர்ந்து உற்சவர் தாயார் புறப்பாடு மேளதாளம் முழங்க நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதற்காக நவராத்திரி கொலுமண்டபம் வண்ண விளக்குகளாலும், தோரணங்களும், கதம்ப மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com