விதிவிலக்கான கிராமம்!

அதாவது கணேசருக்கு மேல் உயர்ந்தவர் வேறு ஒருவரும் இல்லை என்பது இதன் பொருள். இவ்வூர் மக்கள் வெளியூரில் இருந்தாலும் வீடுகளில் பூஜை செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விதிவிலக்கான கிராமம்!
Published on

காவிரி ஆற்றங்கரையில் பிள்ளையார் பெயரில் அமைந்த இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் கணபதி அக்ரஹாரம்.

இந்த கிராம மக்கள் பிள்ளையார் சதுர்த்தி அன்று வீட்டில் பிள்ளையாரை தனியாக வைத்து பூஜை செய்வது இல்லை.

தண்ணீரில் விடுவதும் இல்லை. இந்தப்பழக்கம் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

எல்லா நிவேதனப் பொருட்களையும் பிள்ளையார் கோவிலுக்கு, எடுத்துச் சென்று பூஜை செய்வார்கள்.

'கணேசாத் அன்யத் நகிங்கன்' என்று சொல்வார்கள்.

அதாவது கணேசருக்கு மேல் உயர்ந்தவர் வேறு ஒருவரும் இல்லை என்பது இதன் பொருள்.

விநாயகர் மீது கொண்ட ஆழ்ந்த பக்தியால் கோவிலுக்கே சென்று முழு முதல்வனுக்கு முதல் மரியாதை செலுத்துகின்றனர்.

இதற்கு விநாயகப்பெருமானின் லீலையே காரணம்.

தஞ்சை அரண்மனையில் மராட்டியத்தை சேர்ந்த ஒருவர் அதிகாரியாக இருந்தார்.

அவர் இங்கிருந்த போது விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் பிள்ளையார் வைத்து பூஜை செய்ய முடிவு செய்து

நிவேதனப்பொருட்களை தாம்பாளத்தில் வைத்து வீட்டிற்குள் சென்றார்.

திரும்பி வந்த பார்த்த போது தாம்பாளம் முழுவதும் தேள்கள் இருந்தன.

அவர் பயந்து போய் அக்கம் பக்கத்தில் சொல்ல அவர்கள் இவ்வூர் வழக்கத்தை சொல்லி விளக்கினர்.

பின்னர் அவர் எல்லாப்பொருட்களையும் கோவிலுக்கு எடுத்து சென்று ஒப்படைத்தார்.

இன்னொருவர் வீட்டில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய தொடங்கினார்.

அப்போது திருவிழாவிற்கு வரவழைக்கப்பட்டு இருந்த யானை அவர் வீட்டுக்கு அருகில் வந்ததும், வேகமாக பிளறியது.

பின்னர் வாசல் கதவு, கீற்று இவைகளை பிரித்து எறிந்தது.

பின் சாய்ந்த நிலைக்கு வந்து அங்கிருந்து சென்று விட்டது.

அரண்டு போன அந்த நபர் கோவிலுக்கு வந்து கணபதியை வழிபட்டார்.

ஸ்ரீராமர் பட்டாபிஷேக விழாவை அயோத்தி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நடைபெறும் விழாவாக பாவித்து

எப்படி ஆனந்தமடைந்தார்களோ அதைப்போல கணபதி அக்ரஹார கிராம மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை

தங்கள் வீடுகளில் நடைபெறும் விழாவாக பாவித்து பரவசம் அடைகின்றனர்.

இவ்வூர் மக்கள் வெளியூரில் இருந்தாலும் வீடுகளில் பூஜை செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com