சிறப்புமிக்க அனுமார் வால் வழிபாடு

அனுமன் வாலை வணங்குவது பார்வதி தேவியை வணங்குவதற்கு சமமாகும்.ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக மற்றொரு ஐதிகம் உள்ளது.
சிறப்புமிக்க அனுமார் வால் வழிபாடு
Published on

ராமனுக்கு உதவி செய்ய வேண்டும் என சிவபெருமான் நினைத்தார்.

இதனால் சிவபெருமானே ஆஞ்சநேய உருவம் எடுத்தார்.

அப்போது பார்வதி தேவி நீங்கள் மட்டும் தனியாக போகக்கூடாது.

என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். நான் உங்களை விட்டு எப்படிப் பிரிந்திருப்பேன் என்றார்.

உடனே சிவபெருமான் அப்படியானால் "நீ எனது வாலினுள் புகுந்துவா" என்றார்.

அதன்படி அனுமானுடைய வாலாக பார்வதி தேவி உருப்பெற்றார்.

ஆகவேதான் அனுமான் வாலில் சக்தி ரூபம் மறைந்து இருப்பதால் அனுமன் வாலை கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்கள் வணங்கி மண வாழ்க்கை பெறப் பிரார்த்திக்கின்றார்கள்.

அனுமன் வாலை வணங்குவது பார்வதி தேவியை வணங்குவதற்கு சமமாகும்.

ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக மற்றொரு ஐதிகம் உள்ளது.

ஆதலால் ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் பொட்டிட்டு ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை செய்து வணங்கி வருவது நவக்கிரங்களை ஒரு சேர வணங்குவதற்கு ஒப்பாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com