புராண சிறப்புடைய தலம்

ஆற்காட்டு நவாப் நரசிம்மருக்கு திருவாபரணம் சமர்ப்பித்தார். இந்த ஆலயம் வைகானச முறைப்படி பூஜைகள் நடக்கும் இடம்.
புராண சிறப்புடைய தலம்
Published on

சன்னதிக்கு எதிரில் இருக்கும் விநாயகரை எடுத்து கோபுர நுழைவாயிலுக்கு பக்கத்தில் வைக்க எண்ணி ஒரு கோவில்

அமைத்து விநாயகரை எடுத்ததும் ஊரில் தீ விபத்து ஏற்பட்டதால் பழைய இடத்திலேயே வைத்துவிட்டதாக பரம்பரை வரலாறு உள்ளது.

ஆற்காட்டு நவாப் நரசிம்மருக்கு திருவாபரணம் சமர்ப்பித்தார்.

பிரெஞ்சுக்காரர்களும் சுவாமிக்கு திருவாரணங்கள் சமர்ப்பித்து உள்ளனர்.

புராணம், சரித்திரம் ஆகிய இரு வகைகளிலும் சிறப்புடையதும் இந்தியாவிலேயே அபூர்வமானதுமான

ஸ்ரீ நரசிம்மர் சன்னதி உள்ள தலம் சிங்கிரிகுடி என்பதை இதுவரை கண்டோம்.

இந்த ஆலயம் வைகானச முறைப்படி பூஜைகள் நடக்கும் இடம்.

இந்த ஊரில் கல்வி கேள்விகளில் வல்ல பல சான்றோர்கள் இருந்திருக்கிறார்கள்.

மூலஸ்தானம் மட்டும் தான் பழமையானது.

தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி இவைகள் பிற்காலத்தவையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

திருவந்திரபுரம், ஸ்ரீ தேவனாதப்பெருமாள், பிரகலாதனின் பிரார்த்தனையின் நிமித்தமாக ஹிரண்ய சம்கார

நரசிம்மனாக பிரகலாதனுக்கு சேவை சாதித்தருளினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com