பேரொளி மிளிரும் லட்ச தீப விழா

இறைவனை சிவசிவ என அழைத்து அனைத்து ஜீவன்களும் சிவனருள் பெற வேண்டுகிறேன்.இறைவன் சூரியனாகவும், சந்திரனாகவும், விளங்கி உலகுக்கு ஒளியைக் கொடுப்பவர்.
பேரொளி மிளிரும் லட்ச தீப விழா
Published on

இறைவன் சூரியனாகவும், சந்திரனாகவும், நட்சத்திரங்களாகவும் விளங்கி உலகுக்கு ஒளியைக் கொடுப்பவர்.

அவர் பேரொளி மயமானவர்.

"அருள்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி" என்கிறார் வள்ளலார் பெருமான்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீப விழாவும், 'சொக்கப்பனை' ஏற்றி வழிபடுவதும் இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உணர்த்துகிறது.

"இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி உள்ளது

பல்லக விளக்கது பலரும் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே!"

என்று திருநாவுக்கரசர் இறைவனைப் போற்றுகிறார்.

ஒரு தீபத்திலிருந்து பல தீபங்கள் ஏற்றி ரத தீபம், நட்சத்திர தீபம் என்று ஏற்றி, இறைவனுக்கு தீப ஆராதனை செய்வதும்,

சபரிமலையில் மகரஜோதி வழிபாடு செய்வதும் இறைவனின் ஒளிவடிவை நமக்கு உணர்த்துகின்றன.

தீபஒளி திருநாள் என்றால், தீபங்களின் வரிசை என்று பொருளாகும்.

லட்சதீப விழாவின் மாலைப்பொழுதில் திருக்கழுக்குன்றத்து கோவில், குளம் மற்றும் மாடவீதிகள் மட்டுமின்றி ஊர் முழுவதும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால்,

புற இருளும் நீங்கும், அக இருளும் நீங்கும், ஞானம் உண்டாகும் என்பது மக்களிடையே நிலவி வருகின்ற அசையா நம்பிக்கை ஆகும்.

எல்லோரும் எல்லாமும் பெற்று வாழவும், ஒற்றுமை உணர்வுடன் வாழவும் உலகமே நலம் பெற வேண்டும், வளம்பெற வேண்டும் என வேண்டி,

இறைவனை சிவசிவ என அழைத்து அனைத்து ஜீவன்களும் சிவனருள் பெற வேண்டுகிறேன்.

கழுக்குன்றத்துக் கடவுளை வணங்கினால் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வேண்டிய பொருள் செல்வங்கள் கிடைக்கும்.

வாழ்ந்து முடித்த பின் மறுமைக்கு வேண்டிய அருள் செல்வமும் கிடைக்கும்.

எனவே, சொர்க்கப்பதி என்னும் வீடுபேற்றை அடைந்து உய்யலாம்.

எனவே, இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்த பின் இறுதியிலே பரம்பொருளாம் இறைவனைப் பற்றிப் பிடிப்போம்.

இறையருள் பெறுவோம். வீடுபேறு அடைவோம்.

அந்த பலனை பெற அனைவரும் நாளை திருக்கழுக்குன்றம் வாருங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com