பாவங்களை அகற்றும் திருவிசநல்லூர்

பெண்களின் பாவத்துக்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.திருவியலூர், திருவிசலூர், திருவிசநல்லூர் என்ற பல பெயர்களில் இவ்வூர் அழைக்கப்பெறுகிறது.
பாவங்களை அகற்றும் திருவிசநல்லூர்
Published on

பெண் பாவம் தீர்க்கும் திருவிசநல்லூர்

திருவிசைநல்லூர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்திற்கு கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது.

திருவிடைமருதூர்-வேப்பத்தூர் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.

திருவியலூர், திருவிசலூர், திருவிசநல்லூர் என்ற பல பெயர்களில் இவ்வூர் அழைக்கப்பெறுகிறது.

திருவிசைலூர் என்ற பெயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல ஊர்கள் காணப்படுவதால் இவ்வூரை பண்டாரவாடை திருவிசைநல்லூர் என்றும் அழைக்கின்றனர்.

திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் "சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார்.

எட்டு சிவ யோகிகள் லிங்கத்துடன் இணைந்த இடத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்த சன்னதி நான்கு பைரவர்களில் ஒருவரான சதுர் கால பைரவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாக எட்டு தீர்த்தங்களும் அமைந்துள்ளன.

இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப்பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும்.

பெண்களின் பாவத்துக்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.

நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் மரண பயம் நீக்கும் திருத்தலமாவும் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com