

திருவண்ணாமலையில் கவுரி வனம் என்றொரு வனம் உள்ளது.
அந்த இடம் பார்வதி தேவி தவம் இருந்த இடமாகும்.
அந்த இடத்துக்கு செல்பவர்கள் நினைவிழந்து விடுவார்கள்.
வந்த வழி தெரியாமல் மலையில் தவிக்க நேரிடும் என்று தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ரமணரின் பக்தர்களில் ஒருவரான ஹம்பரீஸ் என்பவருக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது.
கடைசியில் அவர் ஒரு விறகு வெட்டி மூலம் மலையில் இருந்து கீழே இறங்கினார்.
தமிழ்நாட்டில் சித்தர்கள் வாழும் எந்த மலையிலும் இப்படி அதிசய வனம் இல்லை.
திருவண்ணாமலையில் மட்டுமே அந்த அதிசய வனம் உள்ளது.