கடன், நோய், பகை தீர்க்கும் நரசிம்மர்

பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
கடன், நோய், பகை தீர்க்கும் நரசிம்மர்
Published on

பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டு தோறும் பல திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

தைத்திங்கள் 5ம் நாள் பரிக்கல் நரசிம்மர் புறப்பாட்டில் ஊர்வலமாக பெண்ணையாறு சென்று அங்கு ஒரு நாள் இரவு தங்குவார்.

இது ஒரு பிரார்த்தனை திருத்தலம்.

இங்கு பக்தர்களுடைய விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால், அதற்கு இங்கு பொதுமக்களால் அர்ச்சகரை கொண்டு ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்படுகின்றன.

பொதுவாக மனிதர்களுக்கு மூன்று விதமான துன்பங்கள் நேரிடும்.

1. கடன் தொல்லை.

2. பக்கத்திலுள்ளவர்களாலோ அல்லது உறவினர்களால் ஏற்படும் பகை.

3. வியாதியினால், மருந்துகளாலோ குணப்படுத்த முடியாத படி மிகப் பெரிய தொல்லை.

இப்படிப்பட்ட தொல்லைகளிலிருந்து விடுபட ஒரு சிறப்பு பூஜை இக்கோவிலில் நடத்தப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com