துர்க்கை அம்மன் வழிபாடு

துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும். தோஷம் அகல மாலை நேரம் அம்மனை வழிபட வேண்டும்.
துர்க்கை அம்மன் வழிபாடு
Published on

துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகல விதமான சம்பத்துகளும் வந்துசேரும்.

குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும்.

எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள்.

தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வழிபட வேண்டும்.

துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும்.

இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்குரிய சிறப்பான நேரமாகும்.

அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்கு பூச்சூடி,

நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்கா தேவியை வழிபட கோவிலுக்கு செல்லவேண்டும்.

துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.

அந்த பூக்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கி கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com