தேவி வாராகி

கறுப்பு நிறத்துடன் காணப்படும் இவளது முகம் பன்றியை ஒத்திருக்கும்.தண்டநாத வாராகி பொன் நிறம் உடையவள்.
தேவி வாராகி
Published on

வாராகி என்பவள் வாரகமூர்த்தியின் சக்தி ஆவாள்.

கறுப்பு நிறத்துடன் காணப்படும் இவளது முகம் பன்றியை ஒத்திருக்கும்.

இவளுக்கு மொத்தம் 6 கைகள் உண்டு.

வலது கரத்தில் வரத முத்திரையும், இடது கரத்தில் அபய முத்திரையும் கொண்டிருக்கிறாள்.

இவள் எருமையை வாகனமாக கொண்டிருப்பதாக ஸ்ரீதத்துவநிதி சொல்கிறது.

வாராகி அம்சத்தில் தண்டநாத வாராகி, சுவப்ன வாராகி, சுத்த வாராகி என்று மேலும் 3 வகை வாராகிகள் உள்ளனர்.

தண்டநாத வாராகி பொன் நிறம் உடையவள்.

பன்றி முகத்துடன் காட்சி அளிக்கும் இவள் கைகளில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் ஆகியவற்றை ஏந்தி உள்ளாள்.

சுவப்ன வாராகி மேகம் போன்ற நிறம் கொண்டவள்.

இவளுக்கு 3 கண்கள் உண்டு. தலையில் பிறைச்சந்திரனை சூடி இருப்பாள்.

கைகளில் வாள், கேடயம், அரிவாள் ஆகியவற்றை ஏந்தி இருப்பாள்.

சுத்தவாராகி என்பவள் நீலநிறமாக இருப்பாள்.

இவளது பன்றி முகத்தில் இருந்து வெள்ளை நிற கோர பற்கள் வெளியே நீண்டு கொண்டிருக்கும்.

இவள் தலையில் பிறச்சந்திரனை சூடி இருப்பாள்.

இவள் தன் கைகளில் சூலம், உடுக்கை, நாகம் போன்றவற்றை ஏந்தி இருப்பாள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com