

கோவை:
கோவை காந்திமாநகர் மைதானம் அருகே சிலர் மது பாட்டில்களை திருட்டுதனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மணியக்காரம் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 23 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.